ஆடாதோடா மரம் இலை - ஆஸ்த்துமா பிரச்சனைக்காக

Aadathoda tree for Aasthma Cure
ஆடதோடாவை  ஆங்கிலத்தில் "Justicia adhatoda" என்றும் அழைப்பர் மற்றும்  இதன் இலை ஆயுர்வேத சித்த மருத்துவதில்  பயன்படுத்தபடுகிறது .

வேறு பெயர்கள் : ஆடாதொடை, வாசை
இதன் சுவை : கைப்பு

இதன் இலை வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், கேலக்டோஸ் மற்றும்  வைட்டமின் சி சக்தி தரகூடியது.

இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆடதோடாவின்  மருத்துவ  பலன்கள் :


1. சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
2. ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
3. இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
4. இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.


உபயோகிக்கும் முறைகள்:

1. இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

2. இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

3. இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும்.

4. ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும் .







Comments